Tuesday, March 9, 2010

கீறல்கள் ...

தலைமுடி கோதி
தலையனையாய் மாறி
தனக்குள்ளே
தஞ்சமாக்கும் அழகிய
நத்தை என் கைகள் !!!

முகத்தின் அச்சுக்கள்
தேகத்தின் பூச்சுக்கள் !!!
கால்களின் நடனங்கள்
இருபால்களின் தடயங்கள் !!

உதடுளின் ஊர்வலத்தில்
உறிஞ்சி இளைப்பாற
தெரிஞ்சே படைத்தானோ
அந்த பிரமன் !!!

சுமைகள் சுகமாகி
இமைகள் ஊமையாகி
இருவழிகள் இடம்மாறி
சிறகிழந்த தேனிக்கு
இறையூட்ட
இருபது நிமிட போராட்டம் !!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்