அந்நிய தேசத்தில் - என்
விழிகளின் விரதம் ... !!!
இமைகளின் ஏக்கமா ???
இதயத்தின் இடம் மாற்றமா ???
உயிரின் உரையாடலா ???
உணர்வின் உரு மாற்றமா ???
இனியொரு பொழுதில் ...
இனியவளோடு ...
சத்தம் இல்லா நிலவொளியில் ...
நித்தம் அவளோடு ...
இயன்றவரை கதை பேசி ...
அகம் நாடும் அவள் மடியில் ...
பாதி முகம் புதைத்து ...
மீதி முகம் அவள் விரல்கள் தேடி ...
விளையாடி விடை பெறட்டும் ..,
இந்த விழிகளின் விரதம்!!!!
விண் மீன்களின் வெட்கத்தோடு!!!!