Thursday, July 29, 2010

சித்திர விளையாட்டு ....

கொடுக்கும் இறைவனுக்கு
எடுக்கவும் துணுவு....
தன் குருதி திரித்து
நம் மழலை கருதி
வெண்ணிற பாலை
விடியலுக்கு விரைந்து
மடியிலே இறக்கிடும்
ஊணுயிர் பசுவை
பருந்துகளுக்கு இரையாக்கி
பசுவின் சிசுவை
பரந்த தொழுவத்தில்
துணையின்றி செய்தாயே......
கண்ணீரால் கவலை மறக்க
காலம் பல ஆகும் .. ...
சற்று நிறுத்தி வை உன்
சித்திர விளையாட்டை......

வன வாசம்!!!!


மனைவி அவள்
மகனை பெற்றெடுக்க
மாதம் ஒன்பதில் - தான்
மழலையில் தவழ்ந்த
தாய் வீடு சென்று .....
படும் கஷ்டங்களை - என்
பார்வையிலே மறைத்து,
தேடும் இஷ்டங்களை - உன்
தேவைகளை துறந்து,
நுணளின் முனு முனுப்பாய்...
அனலின் கத கதப்பாய் ...
வனளின் வாசம் ராமனுக்கு
எவ்வளவு நரகம் என
எள்ளளவு இடைவெளியில்
என்னவளே உணரவைத்தாய்!!!!

ரோட்டோரம் எனது வீடு !!


இடைவெளியில் எறும்பு
செல்வதே தெய்வச்செயல் ,,,,,
இடைக்கு பின்னால்
இன்னொருவரும் அமரலாம் !!!!
-- ரோட்டோரம் எனது வீடு !!!!

அன்பே .....

கண்ணிலே பிரதிபலித்து,
கனவிலே கலந்துவிட்டு,
உயிரிலே ஊறிவிட்டு,
உணர்விலே உறைந்துவிட்டு ,
கையிலே அகப்பட்டு,
அன்பே என் அகம் தொட்டாய்!!

சில நாட்களில் !!!

விடும் மூச்சிலே
அவளை உணர்ந்து ,
தொடும் விரலிலே
அவளை உதைத்து ,
உண்ணும் உணவிலே
அவளை வதைத்து ,
ஓவியமாய் உருவானவன்,
காவியமாய் கருவானவன்,
புவியாளும் ஓர் அரசன் ,
புன்னகைகள் இன்னும்
சில நாட்களில் !!!

ஆசை!!!

முட்கள் உன்னை
முத்தமிட்டால்
நீ முணுக்கும் பெயராய்
இருக்க ஆசை
அவ்வப்பொழுது !!!

முட்களாகவே மாறி
உன்னை சிலிர்க்க
வைக்க ஆசை
எப்பொழுதும் !!!

தடாலடி ஏற்பாடுகள் !!!!

பூமியிலே பூத்திருக்கும்
நாசியிலே புகுந்திழுக்கும்
விழியிலே விளையாடும்
உலகிலே உயிரோடிருக்கும்
அழகிய மலர்கள் யாவும்
உன் முகவரி அறிந்து
பின் தினசரி நடந்து
தூங்கா நகரத்தை
பூங்கா நகரமாக்கி
வேங்கை உன்னை
விண்ணவர்கள் வியக்க
மன்னவர்கள் மயக்க
நம்மவர்கள் பயக்க
தாங்கி வரவேற்க
தடாலடி ஏற்பாடுகள் !!!!

Friday, July 9, 2010

அழியுதே அழகான இயற்கை !!!

அழியுதே அழகான இயற்கை !!!
மெல்லிய இடையை
மெதுவாய் கில்லி
அழகியே உன்னை
அடியோடு சாய்க்க
போகிறான்!!! பாவி அவன்
மரம் வெட்டுபவன் !!!
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்