Sunday, July 27, 2014

வண்ண மகள் !!!



வண்ண மகள் !!!


தாயோடு சண்டையிட்டு...
உறவோடு உரக்கமோதி ...
ஆசையோடு ஆர்ப்பரித்து ...
புதுமையாய் புனையேற்றி ...
உன்னோடு கதை பேச ..
ஓடோடி உனை உரச ...
கரையோரம் கவின் தேடி ...
இதழோரம் கவிதை பாடி ...
வாராளாம் வண்ண மகள் !!!
அலையெனும் சின்னஞ்சிறுமி !!!

நடுநிசி விழிநீர் !!!


மனதோரம் நினைத்தாலே 
சோர்ந்து விடும் என் மழலை ...
நினைவு முழுதும் நானென்றால் 
நிச்சயம் மயங்கியே விடுவான் ...!!!

அவனோடு விளையாட ...
அவனாக நான் மாற ...
அயராது கதை பேச ...
பிரியாது பிறை பார்க்க ...

தோணாத கற்பனைகள் ...!
நினைக்காத நிஜங்கள் ...!!
நிகழ்த்தியே காட்டும் அவனுக்கு 
நிகர் அவனே தான் ...!!!

பல நேரங்களில்
சிங்கம் IPS..!
சில நேரங்களில்
வீரமாய் வேஷ்டியில் ..!!

அசத்தும் ஆங்கிலம் -அவனின் 
அனேக பேச்சு ..!
அப்பிச்சி அறிந்த சங்க 
தமிழ் உன் மூச்சு ...!!

தாத்தா  தந்த தன்னடக்கம் ...!
பாத்தா பழகிக்கொள்ளும் 
பளீர் ஞானம் ...!!

அப்பத்தா தப்பித்த 
முரட்டு அடி ..!
அத்தைகள் வெக்கப்படும் 
வித்தை வினாக்கள் !!

ஆயாவை மிரட்டும் 
ஆளுமை நேர்த்தி ..!
சித்தப்பாவை சிறைபிடிக்கும் 
அதீத யுக்தி !!

மாமாவை மயக்கும் 
மந்திர பேச்சு ..!!
சித்திகள் சிணுங்கும் 
செல்ல கிச்சில்கள் !!!

அம்மாவை ஆறுதல் படுத்த ..
அப்பா பிழை திருத்த ...
ஆசானும் ஆச்சர்யப்பட ...
எங்கடா நீ அனுபவ பட்டாய் ???

என்னோடு இருந்து விடு ... 
இங்கேயே இரு அப்பா ...
தங்காத வார்த்தைகளா ???
தாங்காத வடுவுகளா ???

என் தங்க மீனே ...
திரவியம் வேண்டி ...
தேசம் தாண்டி ...
பாசம் தொலைத்த 
பாவியடா நான் !!!

புரியாமல்  பிரியவில்லை ..
பிரிவால் புரியாமலும் இல்லை .. 
பாரதம் பண் பட்டிருந்தால் 
பாட்டாளி வீண் போயிருப்பாரா???
பட்டாளி விலை போயிருப்பேனா  ???

விண்ணை பிளக்கும் அழுகை ..
தன்னிலை மறக்கும் பேச்சு ...
அள்ளி கொஞ்சும் அலாதி
சுகம் தொலைத்த துரோகியடா !!!

திண்ணை பள்ளி முன்னமே மூட ...
பண்ணை வீடு தென்னை உதிர ...
என்னை வளர்த்த சொந்தம் பிரிய ...
உன்னை வார்த்த என் மனைவி ஏங்க ...

அன்னையிடம் நீ உறங்க ...
அன்னைதேசம் நான் உதற ...
ஆசையாடா அனாதையாய்
அந்நிய தேசத்தில் வாழ ???

நடுத்தர தகப்பனுக்கு தான்
தெரியும் ...நடுநிசி விழிநீரின்
விசித்திர வலிகள் !!!

சீக்கிரம் வருகிறேன்...
சம்மதம் சொல்கிறேன் ...
சத்தியமாய் நம்பு - இந்த
முறை கடைசி என்று ...!!!

அன்பு அப்பா ,
முரசொலி க


எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்