Wednesday, October 13, 2010

காதல் அழியாது !!!

தன்னிலை மறந்து
உன்னிலே மறைந்து
ஊர் உறங்கும் உற்சவத்தில்
தார் சரியும் சாலை ஓரத்தில்
மணலிலே மங்கையுடன்
கால்கள் நான்கும் நம்
தோள்கள் உரச நடக்க
கைகளின் விரல்கள்
இறுக்கமாய் இணைந்து
இளம் காதல் அது
உயிர் பெற்றது அன்று !!!

அதே வேளையில்
அதே பாதையில்
அன்பே உன்னை பிரிந்து
ஒற்றையாலனாய் உயிரற்ற
உடலோடு உணர்வற்ற
ஊனோடு நடக்கையிலும்
உணர்ந்தேன்
நம் உயிருள்ள காதலை !!!

Wednesday, October 6, 2010

எனை உணர்வாயா ????

எனை உணர்வாயா ????
நாட்கள் பல
நானாகவே நன் இல்லை !!!
துக்கங்கள் பல நேரம்
தூக்கங்கள் சில நேரம் !!!
உணவுகள் சில நேரம்
உன்நினைவுகள் பல நேரம் !!!
பிடித்தம் அளவு
பிடிபடவில்லை !!!
உன்னை பிடித்த அளவு
வேறதும் பிடிக்கவும் இல்லை !!!
கோபங்கள் எல்லை தாண்ட
பாசங்கள் என்னுள் தூங்க
வேறெங்கே நம் வாழ்வை தேட !!!
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்