Friday, November 1, 2013


தூரம் வந்ததால் 
துரோகி ஆனேன் ...
யாரும் இல்லையால் 
பாரம் ஆனேன் .. 

வெடிச்சத்தம் கேக்கலையே 
படுக்கத்தான் தோனலையே ..
நிமிடந்தான் நகரலையே 
சுகம் எதுதான் தெரியலையே ....

பலகாரம் மனக்கலையே 
மனக்கிளிதான்  மறக்கலையே ..
அதுரசம் கிடைக்கலையே 
வெறும்  ரசமா குடிக்கிறேனே ..

புதுத்துணி போடலையே 
தாவணிகள் பார்க்கலையே ..
என் ஆத்தா பெத்த நேரம் 
அரைக்கால் விநாடி கூட 
அவ மடிதான் கிடைக்கலையே ...

தெக்கத்தி சீமையிலே 
சீமானா திரிஞ்ச பய ..
பாதகத்தி கண்ணு பட்டு 
பல மயில் தூரத்துல 
சில மெயிலு அனுப்பிக்கிட்டு 
சிக்கி தவிக்கிறேனே சிவபெருமானே ....

கோவில் குளம் இங்க இல்ல 
அருகில் பேச யாரும் இல்ல ...
பணத்துக்கு பஞ்சமில்ல
பாசத்துக்கு நீ எங்க புள்ள  ???

மூணு முடிச்சு போட்டேன் 
நானும் பெரிய மனுஷன்னு ...
முழுசா மூணுமாசம்
 சேர்ந்து இருக்கல ???
பாளா போனத படிச்சு 
பாரினுக்கு வந்ததால ..

பிள்ள முகம் தேடுதுனு 
ஸ்கை வழியா ஸ்கைப் ல பார்த்தா 
பாதி நேரம் கேசட் சிக்கி சிக்கி ஓடுது ...
மீதிநேரம் மிக்கி மவுசு ல பய புள்ள பிசி ...

சொத்து சுகம் வேண்டாம் புள்ள ....
நீ சத்த சாஞ்சா  போதும் ..
நெஞ்சாங்  கூடு நேரா மோட்சத்துக்கு ...

வெடிச்ச வெடி காகிதம் சேர்த்து 
சந்தோஷ பட்ட நாட்கள் எங்கே ...
திண்ட பலாகாரம் செரிக்காம 
கஷ்ட பட்ட நாட்கள் எங்கே ...
துணி கலையாம அடுத்த நாளு 
ஸ்கூல் கு அலப்பறையா போன நாட்கள் எங்கே ..

அத்தனையும் தொலைச்சிட்டு 
அத்த மகளையும் சீண்டாம ...
பெத்த பிள்ளையும் பார்க்காம ..
போந்தா கோழி மாதிரி 
இனிமேலும் இருக்க கூடாதுன்னு ...
இறைவைனை திட்டுவோமாக .....

அனைவருக்கும் இந்த 
வடவன்பட்டி வாலிபனின் 
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள் ....!!!

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்