Friday, November 1, 2013


தூரம் வந்ததால் 
துரோகி ஆனேன் ...
யாரும் இல்லையால் 
பாரம் ஆனேன் .. 

வெடிச்சத்தம் கேக்கலையே 
படுக்கத்தான் தோனலையே ..
நிமிடந்தான் நகரலையே 
சுகம் எதுதான் தெரியலையே ....

பலகாரம் மனக்கலையே 
மனக்கிளிதான்  மறக்கலையே ..
அதுரசம் கிடைக்கலையே 
வெறும்  ரசமா குடிக்கிறேனே ..

புதுத்துணி போடலையே 
தாவணிகள் பார்க்கலையே ..
என் ஆத்தா பெத்த நேரம் 
அரைக்கால் விநாடி கூட 
அவ மடிதான் கிடைக்கலையே ...

தெக்கத்தி சீமையிலே 
சீமானா திரிஞ்ச பய ..
பாதகத்தி கண்ணு பட்டு 
பல மயில் தூரத்துல 
சில மெயிலு அனுப்பிக்கிட்டு 
சிக்கி தவிக்கிறேனே சிவபெருமானே ....

கோவில் குளம் இங்க இல்ல 
அருகில் பேச யாரும் இல்ல ...
பணத்துக்கு பஞ்சமில்ல
பாசத்துக்கு நீ எங்க புள்ள  ???

மூணு முடிச்சு போட்டேன் 
நானும் பெரிய மனுஷன்னு ...
முழுசா மூணுமாசம்
 சேர்ந்து இருக்கல ???
பாளா போனத படிச்சு 
பாரினுக்கு வந்ததால ..

பிள்ள முகம் தேடுதுனு 
ஸ்கை வழியா ஸ்கைப் ல பார்த்தா 
பாதி நேரம் கேசட் சிக்கி சிக்கி ஓடுது ...
மீதிநேரம் மிக்கி மவுசு ல பய புள்ள பிசி ...

சொத்து சுகம் வேண்டாம் புள்ள ....
நீ சத்த சாஞ்சா  போதும் ..
நெஞ்சாங்  கூடு நேரா மோட்சத்துக்கு ...

வெடிச்ச வெடி காகிதம் சேர்த்து 
சந்தோஷ பட்ட நாட்கள் எங்கே ...
திண்ட பலாகாரம் செரிக்காம 
கஷ்ட பட்ட நாட்கள் எங்கே ...
துணி கலையாம அடுத்த நாளு 
ஸ்கூல் கு அலப்பறையா போன நாட்கள் எங்கே ..

அத்தனையும் தொலைச்சிட்டு 
அத்த மகளையும் சீண்டாம ...
பெத்த பிள்ளையும் பார்க்காம ..
போந்தா கோழி மாதிரி 
இனிமேலும் இருக்க கூடாதுன்னு ...
இறைவைனை திட்டுவோமாக .....

அனைவருக்கும் இந்த 
வடவன்பட்டி வாலிபனின் 
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள் ....!!!

Monday, September 30, 2013

கபடம் இல்லா காதலோடு ...


சிறு வயதில் தமிழ் நாட்காட்டி எனக்கு சொல்லுவதெல்லாம் இன்று அரசு விடுமுறையா ???

இளம் வயதில் இன்று என்ன ராசி பலன் ...

வாரத்திற்கும் ஜோசியம் சொல்லும் இந்த நாட்காட்டி ...

கொரியாவிலும் தினமும் கிழிக்கிறேன் :) .. 

இன்று திங்கள் கிழமை வேறு .... நான் கண்டதோ அரசு விடுமுறை .. ..

அப்பப்பா அவ்வளவு மகிழ்ச்சி .. 

புன்னகையோடு என் மனைவியிடம் இன்று விடுமுறை ஸ்ரீ என்றேன் .. 

அவளும் சின்னதாய் புன்னகைத்து போய் வாருங்கள் மாமா ... 

அது தமிழ்நாடு அரசு விடுமுறை என்றாள் ...

வயதால் குழந்தையாக முடியாவிட்டாலும்...

அவ்வப்பொழுது மனதால் குழந்தையாகி விடுகிறோம் இருவரும் ... 

கபடம் இல்லா காதலோடு ...

Tuesday, September 3, 2013

ஆளவந்த அரசன்  ....!!!

எங்கள் வாழ்விற்கு வரமாய் ...
உணர்வுக்கு உயிராய் ....
உறவுகளுக்கு உற்றவனாய் ...
உலகை ஆள வந்த என் கண்ணா ...
பொக்கிஷம்  நீ ..!!!

கவலை மறப்போம்  
         ....உன் புன்னகை கண்டு ..
சண்டைகள் துறப்போம் 
          ....உன் மிரட்டல் கண்டு ...
நன்றிகள் உரைப்போம் 
           ....உன் வளர்ச்சி கண்டு ...
பிள்ளை நிலா நீ ...!!!

நித்தம் நீ நித்திரையில் 
நீங்காது தேடுகிறாய் ...
நீ தூங்க.. நாங்கள் விழித்திருக்க ..
உன் தேடலில் உறக்கம் மறக்க ...
அன்பின் ஊற்று நீ ...!!!

ஆம்!!!
எங்கள் அன்பின் ஊற்று நீ ...
எங்கள் பொக்கிஷம் நீ ...
எங்கள் பிள்ளை நிலா நீ ..

உன்னோடு உறைந்திருக்கும் 
உன் தாத்தா ஆசியோடு ..
அன்பை கொட்ட ஏங்கும் நம் 
அன்பு உறவுகளின் வாழ்த்துக்களோடு ..
உன் இனிய நினைவுகளில் ...
கொரியா தேசத்தில் நிகழும் ...
அழகிய பிறந்தநாளும் இணையட்டும் ...!!!

அளவில்லா முத்தங்களோடு ..
அப்பா அம்மாவின் அன்பு ..
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 
எங்கள் சிற்றரசருக்கு !!!

Sunday, April 21, 2013


கொரியா தமிழ் நண்பர்கள் தமிழ் புத்தாண்டு விழா 2013 !!!


அழகான இதையத்தொடு 

அன்பான புன்னகையோடு 

என் இனமான , தமிழ் தங்கங்களை ,

வள்ளுவனின்  வாரிசுகளை ,

பாரதியின் பங்காளிகளை ,

கோலமிட்டு , வாழை மரமும் நட்டு ,

நெற்றி பொட்டுமிட்டு ,

தாழ் தொட்டு வணங்கி , தமிழர் திருநாளின் 

புத்தாண்டு  வாழ்த்துக்களோடு ,

என் சிறிய சமர்ப்பணம் , என் உறவுகளுக்கு !!!


விளக்கேற்றி ஒளிவூட்டி ,

நமக்கேற்ற  உடை உடுத்தி ,

நம் சொந்தங்களோடு உணவு உண்டு ,

சுமை மறக்க , உற்சாக உற்சவம் 

இங்கே ஆரம்பம் !!!


இரவும் பகலும் உறவுகளோடு 

வாயாடியே , வாதாடியே ,

வாழ்ந்த கூட்டம் நாமெல்லாம் !!!


குளிரும் பனியும் குதுகூலமிடும் 

கொரியா தேசத்தில் , 

கண்ணாடிகள் சூழ்ந்த கட்டிடத்தில் 

காற்றோடு மட்டுமே இங்கே 

கதை பேச முடியும் நம் மங்கைகளுக்கு !!


வாய் வலிக்கும் வரை ,

வாங்க நாம்  பேசலாம் , 

பலகாலம் பழகலாம் !!!

மனதின் பாரத்தை பரிமாற ,

சாய்ந்து அழ பல தோள்கலாய் ,

சேர்ந்து சிரிக்க பல விழிகளாய் ,

பாரத மாதாவின் பாசப் பறவைகளாய் ,

தமிழன்னையின் விழுதுகளாய் ,

வாருங்கள் வாழ்ந்து பார்க்க ,

இந்த நாள் நமக்கே நமக்கு என்று !!!


தாண்டிய கடல்களுக்கு தெரியும் ,

மோதிய அலைகளுக்கும் புரியும் ,

பிறப்பால் உணராத பிரிவின் வலியும் ,

சொந்தங்களை காணாமல் 

கசிந்த கண்ணீரின் அளவும் !!!



நாம் பிறந்து, அன்னைக்கு அர்த்தம் அளித்தோம் !

மழலை பேசி ஆயுள் கூட்டினோம் நம் பாட்டிகளுக்கு !!

தாய் மண்ணில் தவழ்ந்து , புழுதி படர புரண்டு ,

கிட்டி பிள்ளையும் , கோலி குண்டும் ,

பம்பரமும் , பந்தும் ஆடி 

ஆர்பரித்த  நாட்கள், நமக்கு வசந்த காலம் !

ஆனால் , நம் மழலைகளுக்கு அது ஒரு வரலாறு !!!


மரம் சூழ்ந்த மகா தேசத்தில் ,

மறுபடி மறுபடி நம் முக தரிசனம் 

மட்டும் கிடைத்த 

நம் குட்டி செல்வங்களுக்கு ,

குதுகூலம் இங்கே இந்த நன்நாளில் அரங்கேற்றம் !!!


நம்மில் பலரின் மனைவியும் ,குழந்தையும் இந்தியாவில் !

 நாமோ இங்கே தன்னந்தனியாய் !

எவ்வளவு வலி அது ! 

ஒரே வாரத்தில் உணர்ந்து விட்டேன் !

இங்கே உரக்க சொல்கிறேன் அதை !!!


மகனே ,உன்னை விஞ்சி ஏது என் சந்தோசம் !

மங்கையே , நீ இல்லாது ஏது  என் வாழ்வு !!


மழலை சொற்களை ,

மகனே நீ உச்சரிப்பதால் கிடைக்கும் ,

மங்காத சந்தோசம் வேண்டும் !

தொலைபேசியில் உன் குரல் கேட்கும் 

தொழில்நுட்பம் வேண்டாம் !!


மாலை உன் முகம் பார்க்கும் பாரதம் வேண்டும் !

தேடும் போதெல்லாம் வீடியோவில் வியக்கும் 

விஞ்ஞானம் வேண்டாம் !!


ஆனந்தமாய் ஆடிப்பாடி உன்னுடன் 

விளையாடும் அந்த நொடிகள் தான் வேண்டும் !

ஆறடி பாதையில் அமைதியான 

வாக்கிங் வேண்டாம் !!


நீ சிதறிய படியே சிரித்து உண்ணும் 

உணவுதான் வேண்டும் !

இருத்த முகத்தோடு , இலை  தலையை உண்ணும் 

வாழ்க்கை வேண்டாம் !!


அம்பது டாலர் அவசியம் இல்லை !

நமது டூ வீலர் அவசியம் வேண்டும் !!

ஆட்டோக்களை துரத்தி ,

உன் ஆசை தீர்க்க !!!


எத்தனை பொருட்களை , இறக்குமதி செய்தாலும் 

இந்த பிரிவு இணை செய்ய முடியாது !!!


தேரோடும் மதுரை வீதியில் ,

சித்திரை வெய்யிலும் ,குளிரும் நமக்கு !

குளிரும் சுடுகிறது ,மனைவியே உன் பிரிவால் !!!


என் அன்பு சொந்தங்களை ,

அரங்கம் நிரம்பி , ஊரே ததும்பும் 

திருவிழா போல் , கண்கள் காணுகையில் ,

ஓரமாய் நீர்த்துளி !!!


அழகான பாவனைகளில் ,

நிறைந்த  அழகோடு , நம் தாவணி பெண்களின் 

அழகான நடனங்கள், 

அத்தனை பரிவர்த்தனைகள்  ,

வியத்தகு விழாகோலங்கள்  !!!


வந்தோரை வரவேற்று ,

உளமார உரையாடி ,வயிறார உணவுமிட்டு ,

திக்கு முக்காட வைக்கும்,

 தமிழனின் பண்பாடும் கலாச்சாரமும் ,

கடல் கடந்தும் காக்கப்படுவதை, 

இமை வியக்க எடுத்துரைக்கும் 

நம் விழா  குழுவிற்கு , நன்றிகள் போதாது !!!


மா இலையும் , கூலப்பூவும் ,

முகப்பில் முத்தமிடும் அழகிய திருநாள் இது !

குங்குமமும் சந்தனமும் , நம் நெற்றியிலே   

தொற்றிக்கொள்ளும் வெற்றி விழா இது !!

ஏர்  பூட்டி உழுது , பசி போக்க பாடுபடும் 

தமிழனின் பழம் பெரும் விழா இது !!!

தமிழ் புத்தாண்டு அது !!!


முப்பாட்டன் வம்பாடு பட்டு 

ஆளான அழகர்கள் நாம் ! - பிறர் 

அகம் உணரும் அரும்புகள் நாம் !!

புறம் பேசா வீரத்தமிழர்கள் நாம் !!!

வாழ்ந்து காட்டுவோம்

 வளமான தமிழர்களாய் !

வளைகுடா பல கடந்தாலும் 

பறைசாற்றுவோம் அன்னைத்தமிழை !!!
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்