Tuesday, March 9, 2010

வழி மாறிய குருவி !!!

இரதேட போன
இருபது நாளு
தூக்கணாம் குருவி,
இடையிலே சேர்ந்துகுச்சு
இன்னொரு கூட்டத்துல!!!

தொலஞ்ச பிள்ளைய
அலைஞ்சு தேடிய
அறியாத ஆத்தா குருவி
அடிபட்டே செத்துபோச்சு
அந்த காட்டு கழுகுகிட்ட !!!

அஞ்சு நாளு முன்னே
அண்ணன பிரிஞ்ச
பிஞ்சு குருவி ,
பறக்கவும் முடியல
நடக்கவும் தெரியல
அனாதையா ஆயிப்போச்சு !!!

நாலு நாலு பட்டினியா
நாற்பதடி ஒசரத்துல
தொட்டியில தொங்கியே
துவண்டு போச்சு
அந்த பொட்ட புள்ள !!!

தொணையோட இணைஞ்சு
ஹனிமூன் கு வந்த
அண்ணா குருவி
அல்லாடி போச்சு அந்த
பிணத்த பார்த்து.. ஆமா
செத்து போச்சு சின்ன குருவி !!!

வளர்ந்த குடும்பத்த
வழியிலே விட்டுட்டா
வசதியா வாழ்ந்தாலும்
அசதியா விழும்போது
அனாதையா தான் இருப்ப ???

3 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்