செவி மடல்கள்
கவ்வி மகிழும்
நீயாக நானில்லையே ....
இமையோரம் உன்
இம்சை ...
தோளோடு உன்
தோழமை ...
பின் கழுத்தை
தாவி பிடித்துமா உன்
தாகம் குறையவில்லை ...???
முகம் மறந்த
முதுகோடு முத்தமிட்டே
மோகம் தீர்க்கும்
நீயாக நானில்லையே ...
மல்லிகையை
உதிரும் வரை நீயே
உயிரூட்டி உலாவுகிறாய் ...
தண்டுவடத்தொடு
தாண்டவம் ஆடுகிறாய் ..
திட்டமிட்டே திமிராய்
அவள் தாடை தொட்டு
அகங்களை நாசம் செய்கிறாய் ..
ஒய்யார நடை காண
ஓயாமல் நாணப்பட்டு
மெல்லிய இடை இடித்து
சொர்க்கம் காண்கிறாய் ..
மேலும் எழுத என் உயிர்
என்னிடம் இல்லை ..
நிகழ்கால நிலவுகளிடம்
அவ்வளவும் இல்லை ..
அவ்வளவும் இல்லை ..
கார் கூந்தலே கர்வம்
கொள்ளாதே ...
இரண்டாம் பிறவி
நீயாக நானிருப்பேன் ...!!!