Wednesday, December 22, 2010

வைகையில் வெள்ளம் !!!



மகன் அவன் மறுபுறம்
புறண்டு,
மனம் தனை கொள்ளையும்
கொண்டு ,
ரஹ்மான் இசையையும்
புறந்தள்ளி,
அழகிய அவன் நாவால்
பழகிய வார்த்தைகளை
இளகிய வார்ப்பாய்
இசைக்கையில் ,
இயல்பாய் பிரண்டோடும்
வாநீர் துளிகள் தான்
வைகையில் இன்று
வெள்ளமா ?

Monday, December 20, 2010

தமிழகம் தருசாய் போகட்டும் !!!

ஒரு ரூபாய்க்கு அரிசி ஆனால்
சிறுநீர் கழிக்க மூன்று ரூபாய் !!!
ஏ சி மாலில் இலவசம் ..
நாற்றம் பிய்க்கும் ஓட்டை
சுவற்றுக்கு மூன்று ஓவாய்!!!

உணவகம் நில்லா பேருந்துகள்
கூட உதயசூரியன் உணவகத்தில்
ஓய்வெடுக்காமல் செல்வதில்லை ..
மதுரை ஆரப்பாளையம் பேருந்து
நிலையத்திலும் இதே அடாவடி தான் ..
தமிழகம் தருசாய் போகட்டும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ..!!!

Wednesday, December 15, 2010

குட்டி தோழன் !!!

பிறந்த நாள் முதல்
பிறண்டு உருள
பிடிவாதம் பிடித்த நீ
உன்னால் எதுவும்
முடியுமென தவழ்ந்தே
கண்பித்து விட்டாயே
கவின் செல்லமே !!!
உன் முயற்சியும்
வெற்றியும் தொடரட்டும்
என் குட்டி தோழா !!!
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்