Tuesday, September 3, 2013

ஆளவந்த அரசன்  ....!!!

எங்கள் வாழ்விற்கு வரமாய் ...
உணர்வுக்கு உயிராய் ....
உறவுகளுக்கு உற்றவனாய் ...
உலகை ஆள வந்த என் கண்ணா ...
பொக்கிஷம்  நீ ..!!!

கவலை மறப்போம்  
         ....உன் புன்னகை கண்டு ..
சண்டைகள் துறப்போம் 
          ....உன் மிரட்டல் கண்டு ...
நன்றிகள் உரைப்போம் 
           ....உன் வளர்ச்சி கண்டு ...
பிள்ளை நிலா நீ ...!!!

நித்தம் நீ நித்திரையில் 
நீங்காது தேடுகிறாய் ...
நீ தூங்க.. நாங்கள் விழித்திருக்க ..
உன் தேடலில் உறக்கம் மறக்க ...
அன்பின் ஊற்று நீ ...!!!

ஆம்!!!
எங்கள் அன்பின் ஊற்று நீ ...
எங்கள் பொக்கிஷம் நீ ...
எங்கள் பிள்ளை நிலா நீ ..

உன்னோடு உறைந்திருக்கும் 
உன் தாத்தா ஆசியோடு ..
அன்பை கொட்ட ஏங்கும் நம் 
அன்பு உறவுகளின் வாழ்த்துக்களோடு ..
உன் இனிய நினைவுகளில் ...
கொரியா தேசத்தில் நிகழும் ...
அழகிய பிறந்தநாளும் இணையட்டும் ...!!!

அளவில்லா முத்தங்களோடு ..
அப்பா அம்மாவின் அன்பு ..
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 
எங்கள் சிற்றரசருக்கு !!!

3 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்