Monday, September 3, 2012


பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
என் அன்பு மகனுக்கு ....

இரண்டு வருடத்தில் நீ எனக்கு
புரியவைத்த கோடான கோடி 
உணர்வுகள் வேண்டும் ...
யாரும் யாரையும் உணராத 
அமெரிக்கா வேண்டாம் !!!

மழலை சொற்களை மகனே 
நீ உச்சரிப்பதால் கிடைக்கும் 
மங்காத சந்தோசம் வேண்டும் ...
தொலைபேசியில் உன் குரல் கேட்கும் 
தொழில்நுட்பம் வேண்டாம் !!!

மாலை ஆனால் உன் முகம் 
பார்க்கும் பாரதம் வேண்டும் ...
தேடும் போதெல்லாம் ஆன்-லைன்-ல் 
பார்க்கும் அறிவியல் வேண்டாம் !!!

ஆரவாரமாய் விளையாடும் அந்த  
நொடிகள் தான் வேண்டும் ... 
ஆறடி பாதையில் அமைதியான 
வாக்கிங் வேண்டாம் !!!

நீ சிதறிய படியே உன்னுடன் 
உண்ணும் உணவுதான் வேண்டும் ...
மேலும் கீழும் பார்த்து ... மேலே சிறிது 
இலைதழை போட்டு ... முடியாமல் உண்ணும் 
மேற்கத்திய சக்கை வேண்டாம் ....!!!

அம்பது டாலர் அவசியம் இல்லை .. !!!
நமது டூ-வீலர் அவசியம் வேண்டும் ....
ஆட்டோ - களை துரத்தி உன் ஆசை தீர்க்க !!!

இன்று உன் பிறந்தநாள் ... எத்தனையோ 
பொருட்களை இறக்குமதி செய்தாலும் ...
இந்த நாள் பிரிவு ... இணை செய்ய முடியாதது ..

வாழ்வில் சந்தோசமாக .. சாமர்த்தியமாக 
சாணக்கியனாக ... சச்சினாக ... வாழ்ந்திட 
வாழ்த்தும் உன் அப்பா ...

முரசொலி ....

Friday, August 24, 2012


நிஜமே வேண்டும் ...!!!
நினைவுகள் நிஜமாகவே - என் 
நித்திரை கலைப்பதை - உன் 
முகத்திரை நிலைப்பதை - தன்
அகத்திரை நீக்கி நிலவு பேசுவது 
இந்த செங்கந்தால் மலருக்கு 
புரியாத என்ன ???

Saturday, August 18, 2012


கணக்கும் இதயத்துலே.....
தாண்டிய கடல்களுக்கு தெரியும் ..
மோதிய அலைகளுக்கும் புரியும் ..
பிறப்பால் உணராத பிரிவின் வலியும் ..
காணமல் கசிந்த கண்ணீரின் அளவும் ...

Thursday, March 1, 2012

நீயாக நானில்லையே ....!!!



நீயாக நானில்லையே ....!!!
செவி மடல்கள் 
கவ்வி மகிழும் 
நீயாக நானில்லையே ....

இமையோரம் உன் 
இம்சை ...
தோளோடு உன் 
தோழமை ...

பின் கழுத்தை
தாவி பிடித்துமா உன் 
தாகம் குறையவில்லை ...???

முகம் மறந்த
முதுகோடு முத்தமிட்டே 
மோகம் தீர்க்கும் 
நீயாக நானில்லையே ...

மல்லிகையை 
உதிரும் வரை நீயே 
உயிரூட்டி உலாவுகிறாய் ...

தண்டுவடத்தொடு 
தாண்டவம் ஆடுகிறாய் ..
திட்டமிட்டே திமிராய் 
அவள் தாடை தொட்டு 
அகங்களை நாசம் செய்கிறாய் ..

ஒய்யார நடை காண 
ஓயாமல் நாணப்பட்டு
மெல்லிய இடை இடித்து  
சொர்க்கம் காண்கிறாய் ..

மேலும் எழுத என் உயிர் 
என்னிடம் இல்லை ..
நிகழ்கால நிலவுகளிடம்
அவ்வளவும் இல்லை .. 

கார் கூந்தலே கர்வம் 
கொள்ளாதே ...
இரண்டாம் பிறவி 
நீயாக நானிருப்பேன் ...!!!

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்