Tuesday, March 9, 2010

மழைக்காலம் !!!

மேகம் தன் சட்டையை பிழிந்து
மென்மையான இலைகளுக்கு
தண்ணீர் கொடுக்கும்
பருவம் இங்கே ஆரம்பம் !!

காகித கப்பலை
மூழ்கடித்து,
பிரிமியர் செப்பலை
சேறாக்கி,
அழகிய ஓட்டையை
அருவியாக்கி,
ஆட்டம் போட்ட
ஞாபக ஓட்டங்கள் !!!!

தவளையின் குறட்டை
தாயின் தாலாட்டு!!!
குவளை நீர்கொண்டு
குளியல் நாடகம் !!!
கூடுதல் மழையெனில்
வகுப்புகள் மூடப்படும் !!
விடுப்புகள் விடப்படும் !

காலை பனியில்
அருகம் புல்லில்
அவள் பெயர் எழுதி
ஆசை தீர்த்த ஞாபகம்!!!

கிளையை கிள்ளிவிட்டு
நண்பனை குளிப்பாட்டும்
பழிதீர்க்கும் பட்டாளம் !!!

என் மழலையில் வந்த மழை
எதிர் மலையில் ஒழிந்துகொண்டு
ஏனோ வர மறுக்கிறது !!!!







No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்