Tuesday, March 9, 2010

உனை நினைத்து ஓர் கவிதை !!!


தேவதையே உனை காண
தேடுதே இமைகள் !

என்னவளே உனை எண்ணி
எழுதுதே விரல்கள் !

வஞ்சி உனை கொஞ்ச
கெஞ்சுதே கைகள் !

நறுமுகையே உனை நாடி
நடக்குதே கால்கள் !

அடிக்கடி உனை நினைத்தே
துடிக்குதே இதயம் !!!

ஆசையாய் பேச
ஆசைப்படும் என் உதடுகள் !

உன் ஓசை கேட்க
ஓய்வெடுக்கும் என் செவிகள் !

குழந்தையாய் மாறி
குழையும் உன் சிணுங்கல்கள் !!!

தோழியாய் மாறி
கேலியாய் பேசும்
உன் விளையாட்டுக்கள் !!!

மனைவியாய் மாறி
மயக்கத்தில் ஆழ்த்தும்
உன் உணர்வுகள் !!!

தாயாய் மாறி
தாறுமாறாய் தரும்
உன் பாசங்கள் !!!

உன் அழைப்புக்காக
ஆவலுடன் இருக்கும்
என் அலைபேசி !!!

என் தலைமுடி இடைவெளிகள்
தவம் கிடக்கின்றன
தலைவி உந்தன்
விரல் ஸ்பரிசங்களால்
அடைபட !!!

சுற்றும் காற்றினை
சற்று நிறுத்தி
நீயே கேட்டு பார்
உனது பிடித்தம்
அளவு சொல்லிவிட்டு செல்லும் !!!

கண்களை அழகாக்கும் - உன்
மெல்லிய புருவத்திற்கும்
புருஷன் இவன் அடிமைதான் !!!

தோற்றங்களில் மாறுபடும் -- உன்
நிழற்படங்கள்
நிஜமாய் தூண்டுதடி -- நம்
இருநிழலும் சங்கமிக்க !!!

அன்பே உந்தன்
அழகிய கன்னத்தில் -- அந்த
சிறிய மச்சத்தில்
சிதறியது என் மனம் மட்டும் அல்ல !!!
சிரித்தது என் விழிகளும் தான் !!!

சிணுங்கும் சிரிப்பால் -- எனை
சிறைபிடித்த Sri உனை
சிற்பமாய் என்
சிரம் தாழ்த்தி உன்
அகம் மலர காத்திடுவேன்
ஆயுள் முடியும் வரை !!!

எனையே மறந்திட -- உனது
ஏக்கங்கள் நிகழ்ந்திட -- உனக்காக
தூக்கங்கள் துறந்திட --உன்
துக்கங்கள் பகிர்நதிட -- நம்
நினைவுகள் நிஜமாக -- அலாதி
ஆசைகள் அனுபவித்திட -- நீயே
என் உலகம் ஆயிட
நித்தமும் பிரார்த்திக்கும்
உன் அன்பு
செல்வா !!!

1 comment:

  1. Yenda idhellam public panra.. unaku vera velaye illiya?

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்