Monday, March 8, 2010

மாற்றான் தோட்டத்து மல்லிகை....

சிவந்த ஞாயிறாய்
கடந்த ஞாயிறுகள்
தரும் ஞாபகங்கள் ,
கடந்த ஜென்மத்து பிரதி
பலன்களா ?

கண் மூடினால்
இருள் ஏது உன் முகமே !!
நாசி திறந்தால்
சுவாசம் ஏது உன் வாசமே !!!
செவி சாய்த்தால்
வேறேது செல்லத்தின் குரலே !!!

ஆசை பட்டது இல்லை,
பட்ட ஒன்றும் விட்டு போச்சு
வெந்த புன்னு வீங்கி போச்சு
சொந்த பந்தம் சுருங்கி போச்சு
வந்த பந்தம் வராமலே போச்சு!!!

நிஜத்தை நீ உணரவில்லை
அகத்தை நான் உணரவில்லை
பக்கத்தில் இல்லாத உயிர்
விட்டு பிரியும் தூரம்
வெகுதொலைவில் இல்லை!!

வெள்ளித்திரை வசனம்
வீம்பாய் ஞாபகம் வருது .....

சேர்ந்து வாழ்ந்தாலும்
பிரிந்து அழுதாலும்
அது காதல் தான்..

உனக்கு 81 னா
எனக்கு 80...
அப்பவும் இப்படித்தான்...
இருந்தாலும் இறந்தாலும்

ஆசைகள்...
ஓசையாய்
ஒலித்து ஓயும் ,
ஒழியாய்
ஒழிர்ந்து இருளும் ,
ஓடையாய்
ஓடி வறளும்,
உண்மைதான் அது ,
அனைத்தையும் துறந்து
மறந்தும் மறவாது
மணவாழ்க்கை மாற்றான்
தோட்டத்து மல்லிகையோடு ....

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்