Wednesday, March 23, 2011

நானும் அவளும் ..!!!


அரை நொடி கூட 
அகலாத அவள் நினைவுகள் 
என் ஆயுள் முடிவுக்கு பின் 
எங்கே போகும் ???

புரியும் முன்னே என்னுள் 
புதைந்த பூவசமே ,
சுவாசம் முழுதும் உந்தன் 
உணர்வே ...!!!

விழிகளுக்கு விடை சொல்லி 
நீ செல்லும் ஒவ்வொரு நிமித்தமும் ,
விடைதெரியா விழிநீருக்கு 
அணை கட்ட கரிகாலன் இல்லையே ????

நினைவில் நீ மட்டுமே,
நித்தமும் நிறைவவள் !

கனவில் நீ  மட்டுமே,
காரணமின்றி கலப்பவள்  !!

உணர்வில் நீ மட்டுமே,
உரிமையோடு உறைந்தவள்  !!!

உலகில் நீ மட்டுமே ,
எனக்காக பிறந்தவள் !!!

நீ மட்டும் போதும் நிஜமாய் 
வாழ்வதற்கு .. !!
வாழ்ந்த காலம் போதும் 
இறந்தாலும் வாழ்வதற்கு ..!!

அன்புடன் ஆசையாளன் ...

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்