Tuesday, March 9, 2010

நட்பு!!!

அழுதவுடன் அரவணைக்கும்
அன்னையிடம் ஆரம்பிக்கும்
அந்த அழகிய நட்பு !!!

ஆள் கொஞ்சம் வளர்ந்திடவே
ஆடாத ஆட்டம் ஆட
ஆள்சேர்த்து ஆர்பரிக்கும்
ஆண்களின் நட்பு !!!

இவன் வீட்டு சாப்பாடு
இனம் விட்டு இடம் மாறி
இளம் சிட்டாய் இவ்வுலகையே
இரண்டக்கிடுமே இந்த நட்பு !!!

ஈயாய் ஒற்றிக்கொள்வோம்
ஈருயிராய் வாழ்ந்திடுவோம்
உள்ளதெல்லாம் செலவழிப்போம்
ஊரு ஊராய் சுற்றிடுவோம் !!!

எந்த ஜாதியும் அறியமாட்டோம்
ஏழை ஏக்கமமும் உணரமாட்டோம்
ஐந்து விரலாய் உதவிக்கொள்வோம்
ஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் !!!

ஓரிடத்தில் இல்லா விட்டாலும்
ஓருயிராய் நினைவு கொள்வோம்
ஓளவை வயது வரை ஒற்றுமையாய்
உலகை அளப்போம் !!!!

1 comment:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்