Thursday, July 29, 2010

சித்திர விளையாட்டு ....

கொடுக்கும் இறைவனுக்கு
எடுக்கவும் துணுவு....
தன் குருதி திரித்து
நம் மழலை கருதி
வெண்ணிற பாலை
விடியலுக்கு விரைந்து
மடியிலே இறக்கிடும்
ஊணுயிர் பசுவை
பருந்துகளுக்கு இரையாக்கி
பசுவின் சிசுவை
பரந்த தொழுவத்தில்
துணையின்றி செய்தாயே......
கண்ணீரால் கவலை மறக்க
காலம் பல ஆகும் .. ...
சற்று நிறுத்தி வை உன்
சித்திர விளையாட்டை......

2 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்