Wednesday, December 31, 2014

விழிகளின் விரதம் ...!!!



ஆழ்ந்த இரவினில்  
அந்நிய தேசத்தில் - என்  
விழிகளின் விரதம் ... !!! 

இமைகளின் ஏக்கமா ??? 
இதயத்தின் இடம் மாற்றமா ??? 
உயிரின் உரையாடலா ??? 
உணர்வின் உரு மாற்றமா ???  

இனியொரு பொழுதில் ... 
இனியவளோடு ... 
சத்தம் இல்லா நிலவொளியில் ...
நித்தம் அவளோடு ...
இயன்றவரை கதை பேசி ... 

அகம் நாடும் அவள் மடியில் ... 
பாதி முகம் புதைத்து ...
மீதி முகம் அவள் விரல்கள் தேடி ...  
விளையாடி விடை பெறட்டும் ..,
இந்த விழிகளின் விரதம்!!!!
விண் மீன்களின் வெட்கத்தோடு!!!!

4 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்