Thursday, June 11, 2015

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!




உறவுக்கு உயிரூட்டிய ..
உங்களின் வருகை ... !!!
வாரிசுக்கு வரமான 
உங்களின் பிறவி ...!!!

இரு செல்வங்களாய் 
இந்நாளில் பிறந்து ...
நீங்கள் நிகழ்த்திய..
அத்தைனையும் அற்புதமே !!!

மனங்களில் மகிழ்வு..
கரங்களில் களிப்பு ..
முகங்களில் முத்தாய்ப்பு ..
தினம் தினம் தித்திப்பு ..!!!

காணாத விழிகளில் 
கரைந்தோடும் கண்ணீரில் ...
கவலைகளை கரையேற்றி ...
மகிழ்வுக்கு வித்தாய் ..
இந்நாளை ஏற்று ...

மனதாழமாய் ஊற்றெடுத்த ..
அன்பின் வெளிப்பாடாய் ...
ஆசை மாமாவின் அளவில்லா 
வாழ்த்துக்கள் உங்கள்  இருவருக்கும் !!!

எல்லா வளமும் பெற்று ...
அப்பா அம்மாவின் 
ஆசை செல்லங்களாய்..
அனைவரின் ஆசியோடு ...
நீண்ட ஆயிளோடு வாழ ...
எங்களின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ..!!!
 தியா  & தேவ்னா !!!

2 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்