Thursday, February 17, 2011

பூவிதழும் பூவிழியும் ...




இதழின் புன்னகை இரவல் தான் 
நம்மில் பலருக்கு .....
இரவிலே காதல் செய்ய ஏனோ விழி  
அது கண்ணீரை  தேடுகிறது ....

கடல் நீர் இவ்வளவு சேர 
உலகில் எவ்வளவு விழிகள் 
அழுகையோடு சிரித்திருக்க வேண்டும் ....

அழும் மழலையின் மனம் 
அடுத்த நொடியே சிரிக்கும் ...
ஆறடி வளர்ந்த பின்னும் 
அழுகை தான் மீண்டும் உன்னை 
மழலை ஆக்குகிறது ...

மனசின் பாரங்களை 
விழிநீரால் லேசாக்க ..
மனோதோர குப்பைகளை 
கண்ணீரால் காணாமல் செய்ய ....

சாய்ந்தழ ஒரு தோள்...
சேர்ந்தழ இரு விழி ..
தேவை தானே ????????????

விழிநீர் வடிந்தால் 
வீரமற்றவன் அல்ல ....மாற்றாக ...
மீண்டும் பிறப்பவன் ....

உறங்காமல் அழும் கண்களும் 
உரக்க அழும் தனிமையும் 
என்றும் இனிமையானதே .....

3 comments:

  1. முதல் வரி முதல்
    கடைசி வரிகள்
    வரை
    ஏதோ
    ஒரு அழுகை
    தென்படுகிறது
    ரசிக்கும் கண்ணீரும்
    கவிதை தான்
    மிக நன்று

    ReplyDelete
  2. சேர்ந்தழ இரு விழி ..
    தேவை தானே ????????????

    விழிநீர் வடிந்தால்
    வீரமற்றவன் அல்ல ....மாற்றாக ...
    மீண்டும் பிறப்பவன் ....

    உறங்காமல் அழும் கண்களும்
    உரக்க அழும் தனிமையும்
    என்றும் இனிமையானதே .....


    super linessssssssss...keep it up nanbaa

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்