Friday, November 14, 2014

குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள் !!!



பாரதி சொல்லிய ...
வாழ்வின் சூத்திரமான  .. 
இந்த நடை முறைகளை ...
நாமும் நினைவு கூர்ந்து ...
நம் மழலைகளும் 
கடைப்பிடிக்க ...
முயல்வோம் முடிந்த வரை  ..
இந்த நாள் முதல் !!!

ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா....!!!
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா...!!!

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா...!!!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா...!!!

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு...!!!
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா...!!!

கணிணியும் தொலைக்காட்சியும் ...
Cell-போணும் Tab-ம்மாய் ...
கூண்டுக்குள் அடைபட்ட 
கிளிகளாய் மாறிப்போன ...
குற்றம் கொடியது தான் ...!!!

வியர்வையே அறியாத ..
விட்டுகொடுப்பதை உணராத ...
வினோத மாயை உலகத்தில் 
உலாவும் நம் பிஞ்சுகளை .. 
வெம்பாமல் விளைய வைக்கவேண்டியது ...
நம் கைகளில் தானே !!!

உணர்ந்து உருவாக்குவோம் ...
சகலமும் அறிந்த ..
சகிப்புணர்வும் தெரிந்த ...
சரித்திர நாயகர்களை !!!

அன்பு வாழ்த்துக்களோடு ...
உங்களில் ஒருவன் ..
முரசொலி க 

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்