அலுவலகம் முடிந்த பின்
ஆசையாய் கணவனின் வரவுக்கு
ஏங்கும் மனைவியின் மனதை
மன்னவன் சொல்லும் "களைப்பாய் இருக்கு"
எனும் வார்த்தை எவ்வளவு கொல்லும்????
நாலு சுவற்றுக்குள்
கண்ட பொருளையே
திரும்பவும் பார்க்கின்ற
அவளின் கண்களுக்கு
யார் சொல்வர்,
மாலையில் மழை உன்
விழிகளில் மட்டும் பெய்கின்றது என்று ????
பணிக்கு செல்வதால் பாசத்தை
இழப்பதாய் ஒரு பக்கம் பெண்கள் !
வீட்டிலே இருப்பதால் வெறிச்சோடி
ஊமையாய் ஆகிறேன் இந்த வாயாடி!!
இப்படி ஒரு பக்கம் !!!
நீயா நானாவில் அற்புதமாய்
சொன்னார் அந்த ஆப்ரிக்க
எழுத்தாழர் ....
வேலை முடித்து
களைப்பாறும் , ஓய்வெடுக்கும்
இடமாகவே பார்க்கின்றோம்
நமது வீட்டை ...
வேலை முடிந்த பின் நண்பர்களோடு
விருந்து என்றால் நமக்கு களைப்பு இல்லை ....
ஆனால் வீட்டுக்கு வந்தால் நமக்கு களைப்பு ...!!!
அது தான் இன்றைய நம்முடைய
கலாச்சாரத்தின் அழிவு என்று !!!
முதுகுக்கு பின்னால் சுமந்து
குழந்தையை தன்னிச்சையாக
வாழவிடுகிறான் ஆப்ரிக்கன் !!!
ஆனால் நமோ ,
மார்போடும் தோளோடும்
அணைத்து , குழந்தை
நம்மை சார்ந்தே வளரசெய்கிறோம் !!!
சிந்திக்க வேண்டிய
வரிகளாய் என் மனதில் பட்டது !!!
அதனால் பகிர்ந்து கொண்டேன் ..
--- முரசொலி