Wednesday, October 22, 2014

தீபாவளி திருநாள் வாழ்த்து!!!


அடம் பிடித்து ஆடை வாங்கி ..
அதில் சின்ன மஞ்சள் தொட்டு ...
அதிகாலை எண்ணெய் இட்டு ...
அம்மா குளிப்பாட்டி ..
ஆயா தலை துவட்டி ...
அப்பா ஆடை இட்டு ...
சித்தி சிகை செய்து ...
அத்தை அறுசுவையை ...
மாமா ஊட்டி விட  ...
தங்கையிட்ட கோலம் தாவி .. 
தாய் மண்ணில் தோழனோடு ...
தடாலடி வெடி வெடித்து ..
இளம் கன்றாய் இருந்த ...
மங்காத நிஜங்கள் ...
மனம் முழுதும் எப்பொழுதும் ...!!!

ஐந்து நாள் பதம் செய்து ...
இந்த நாள் இனிதிட்ட அதுரசம் ...
அர்த்த ராத்திரி குழி பனியாரம் ..
அம்புட்டு அழகாய் அத்தி பூ இட்லி ..
தொட்டுக்க ஆட்டு கறி..
நாக்கு நமக்க நாட்டு கோழி ..
ஆசை தீர ஆம வடை ..
ஏப்பம் வர ஆப்பம் கொஞ்சம் .. 
பால் பணியாரம் ... பஜ்ஜி வேறு ..
பாதி உறவுக்கு .. மீதி இரவுக்கு!!! 

அளவில்லாமல் அமுக்கி விட்டு.. 
அடிவயிற்றில் சுடு சாம்பலிட்டு..
ஆயா வீட்டு திண்ணையிலே ..
அசந்து தூங்கி .. அலறி எழுந்து ..
அழகாய் முடியும் அந்த தீபாவளி !!!

அளவான அஞ்சல் அட்டையில் ...
ஆர்ப்பரிக்கும் ஓவியம் தீட்டி ..
அன்பை பரிமாறிய ..
அமைதியான நாட்கள்.. நினைவில் ...!!!

அவசர உலகத்தில் ...
ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு ..
நானும் உன்  உறவு என உரக்க கத்தி .. 
மகிழ்வாய் வாழ்வோம் ...
தீபாவளி திருநாளில்  என வாழ்த்தும் ...

வடவன்பட்டி வாலிபன் ..
முரசொலி க 

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்